சுகாதார ஊழியர்களுக்கான சலுகை மற்றும் மேலதிக சேவை கால கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் வியாழக்கிழமை (6) நாடளாவிய ரீதியில் 24 மணி நேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
All Stories
பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு உலக பயங்கரவாதம் மற்றும் உலகளாவிய நவீன சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை கோட்பாடுகளுக்கமைவாக பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புதிய சட்டம் உருவாக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார சபையில் தெரிவித்தார்.
ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் இந்தப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களும் முழுமையாக நன்மையடையும் வகையில் தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று சனிக்கிழமை (08) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் செல்வாக்கிற்கு இடமில்லை, ஆசிரியர் இடமாற்றங்கள் ஆசிரியர் இடமாற்றல் சபையினால் மட்டுமே மேற்கொள்ளப்படும் - பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.
இந்திய-இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சந்தேக பர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்ற சட்டமா அதிபரின் அறிவித்தல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை நாட்டுக்கு முன்வைக்குமாறு கோரி சுதந்திர ஊடக இயக்க தொழிற்சங்கம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் சபாநாயகரைப் பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.
மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) அநுராதபுரத்தில் காலமானார்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் உறுப்பினர்களைப் பதிவு செய்வதற்கான (AH பதிவு) புதிய முறையை தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான 11 கிராமிய வங்கிகள் தோட்ட தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியில் ரூபா 100 கோடிக்கும் அதிகமான நிதியை மோசடி செய்துள்ளதாக தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம் குற்றப்புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளது.
அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.