ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
All Stories
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகம் உள்ளடங்களாக அரச திணைக்களங்களில் வேலை பெற்றுத் தருவதாக கூறி இளைஞர் யுவதிகளிடம் பெருந்தொகையான பணம் பெறப்பட்டு மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு, மின்னஞ்சல் (EMAIL) கணக்குகளை உருவாக்கும்போது, பெற்றோரின் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டாம் என காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாடாளுமன்றக் குழுவில் தெரிவித்துள்ளனர்.
கடவுச்சீட்டுக்கான இணையவழி (Online) விண்ணப்பங்களை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சமர்ப்பிக்க முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வியற் கல்லூரிகளில் 2018/2020 ஆம் ஆண்டுகளில் டிப்ளமோ நிறைவு செய்த டிப்ளமோதாரிகளுக்கு நியமனம் வழங்கும் பிரதான நிகழ்வு எதிர்வரும் 16 ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற உள்ளது.
பாலின இடைவெளியைக் குறைக்கும் வகையில் பெண் பணியாளர்கள் தொடர்பாக சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்றுச்செல்லும் ஆசிரியர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களில் ஒரு வருடத்துக்கு ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் ஆகவே இருந்து வந்திருக்கிறது.
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்க்கப்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள ஆனால். இதுவரையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்ப்பு செய்யப்படாத உத்தியோகத்தர்களின் சம்பள ஏற்றத்தை செலுத்துதல் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அரச பணியாளர்களுக்கு, ஐந்தாண்டு விடுமுறையில் வெளிநாட்டில் பணியாற்ற வாய்ப்பளிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.