விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
All Stories
வடமேல் மாகாணத்தில் 697 அதிபர் வெற்றிடங்களும் 5098 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுவதாக அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றை விரைவில் வழங்குவதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று முன்வைக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் அமைச்சர் ரமேஷ் பத்திரண உறுதியளித்துள்ளார்.
நிதி அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு இன்று மாலை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஏகமனதாக அனுமதி அளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விரைந்து மறுசீரமைக்க தவறினால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 6000 பேர் தொழிலை இழக்க நேரிடும் என துறைமுகம் மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கான புதிய நியமனங்களைத் தடுத்து உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு சமாந்தரமாக உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டங்களை திருத்த எதிர்ப்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக R.M.A.L.ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
தனது பெயரை பயன்படுத்தி அல்லது தமது சகோதரர், உறவினர், அல்லது பணிக்குழாமின் அதிகாரி என கூறிக்கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக பணம் வசூலிக்கும் எவருக்கும் பணம் வழங்கக்கூடாது என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய நிதிய விகிதத்தையும் எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.