லெபனானில் பணிபுரியும் இலங்கை பிரஜைகளுக்கு விசேட அறிவித்தல்

தெற்கு லெபனானில் பணிபுரியும் இலங்கை பிரஜைகள் உடனடியாக பெய்ரூட்டில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்களது தகவல்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தல் செயற்பாடுகளுக்காக விசேட கையடக்க தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- 70 386754 - சனத் பாலசூரிய, முதன்மைச் செயலாளர்
- 71 960810 - பிரியந்த தசநாயக்க
- Cette adresse e-mail est protégée contre les robots spammeurs. Vous devez activer le JavaScript pour la visualiser.
லெபனானில் பணிபுரியும் இலங்கை பிரஜைகள் தங்களது பாதுகாப்பு தொடர்பாக குறித்த பதிவு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.