சட்டவிரோத கூட்டங்களில் பங்கேற்போர் உடனடியாக நாடுகடத்தப்படுவர்- குவைத்

சட்டவிரோத கூட்டங்களில் பங்கேற்போர் உடனடியாக நாடுகடத்தப்படுவர்- குவைத்

குவைத்தில் சட்டவிரோத கூட்டங்களில் பங்கேற்கும் வெளிநாட்டினரை உடனடியாக நாடு கடத்த உள்துறை அமைச்சர் ஷேக் தமர் அல்-அலி உத்தரவு.

குவைத்தில் குடியேறிய எந்தவொரு வெளிநாட்டினரும் குவைத் நாட்டின் பொது நலன், பாதுகாப்பு அல்லது ஒழுக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் நடத்தைகளில் ஈடுபடுவது கவனத்திற்கு வந்தால் அவர்கள் உடனடியாக நாடு கடத்துமாறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

எமது இணையதளம் எந்தளவுக்கு உங்களுக்கு நன்மைபயக்கிறது என்று கூறுங்கள்

குவைத் நகரில் உள்ள ஈராடா சதுக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது, அரசாங்க முடிவுகளை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக சம்பந்தப்பட்ட வெளிநாட்டவரை நாடு கடத்துவதற்கான முடிவை அமைச்சர் சமீபத்தில் வெளியிட்டார்.

சட்டவிரோத கூட்டங்களில் பங்கேற்கும் அல்லது குவைத்தின் உள் விவகாரங்களில் தலையிடும் எந்தவொரு குடியிருப்பாளரும் உடனடியாக நாடு கடத்தப்படும் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எந்த வித சமரசமும் செய்யப்பட மாட்டாது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image