கனடாவில் இலங்கையர்கள் கொலை தொடர்பில் வௌியான தகவல்

கனடாவில் இலங்கையர்கள் கொலை தொடர்பில் வௌியான தகவல்

கனடாவில் உயிரிழந்த 6 இலங்கையர்களின் சடலங்களை, தேவையேற்படின் இலங்கைக்கு கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என கனடாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் Anzul Banu Jhan தெரிவித்துள்ளார்.

அதற்கான செலவீனங்கள் தொடர்பில் எந்தவொரு தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என இலங்கை ஊடகமொன்றிடம் அவர் தெரிவித்துள்ளார்.

சடலங்கள் கிடைக்கப்பெறும் தினம் தொடர்பில் எந்தவொரு அறிவிப்பும் தமக்கு கிடைக்கபெறவில்லை என்றும் கனடாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் Anzul Banu Jhan தெரிவித்தார்.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில், இலங்கையைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image