உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடையாது.
பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சமகாலத்தில் நிலவுகின்ற வீசா முறைகளை மிகவும் இலகுபடுத்துவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல (ATA) வரைவு தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஆகியோர் தலைமையில் வெள்ளிக்கிழமை (01) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு தொடர்பாக உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இதன்போது முன்வைத்துடன், அதுதொடர்பில் அவர்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விளக்கங்களை வழங்கி தெளிவுபடுத்தியதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்கள். சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைபு திணைக்களம், உயர் ஸ்தானிகர் காரியாலயம் மற்றும் தூதுவராலய காரியாலயங்களை பிரிதிநிதித்துவப்படுத்தி இராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
புதிய தாெழில் சட்டத்துக்கு புதிய திருத்தங்களை சமர்ப்பிப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரம் வரை காலம் வழங்க வேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தேசிய தொழில் ஆலாேசனை சபைக்கு தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR குறியீடு முறை இன்று (01) முதல் நீக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
புதிய தொழில் சட்டத்துக்கு தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அத்தியாயம் ஒன்றை உள்ளடக்க இருப்பதுடன் அது தொடர்பான பிரேரணைகளை சமர்ப்பிப்பதற்காக உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கி, அந்த சட்டமூலத்தை மீண்டும் தயாரிப்பதற்காக சட்டவரைஞர் குழுவிற்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
- EPF/ETF நிதியங்களை அரசாங்கம் கையாள முற்படுவதற்கு எதிராக யாழில் போராட்டம்
- EPF/ETF ஐ பாதுகாக்க வலியுறுத்தி யாழில் போராட்டம்: 9 தொழிற்சங்கங்கள் கூட்டாக அழைப்பு!
- முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் - இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க
- பிரமிட் வணிகத் திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!