All Stories
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச ஊழியர்கள், இடமாற்றம் மூலம் சேவையில் ஈடுபட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் (BASL) நியமிக்கப்பட்ட விசேட குழு, உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தின் சில விதிகள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதை அவதானித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா விஜேகோன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரின் மேதின ஊர்வலம் அட்டன் நகரில் நடைபெற்றது.
அட்டன் நகர மத்தியில் இருந்து பதாதைகளை ஏந்தி கோசங்களை எழுப்பியதுடன் பேரணியிலும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரின் அங்கத்தவர்கள் ஈடுப்பட்டனர்.
சுமார் 1000 ற்கும் மேற்பட்ட இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் அங்கத்தவர்கள் கலந்துக் கொண்ட இந்த பேரணி அட்டன் நகர் ஊடாக மகாநாட்டு மண்டபத்தை சென்றடைந்தது.
ஆசிரியர் ஆட்சேர்ப்பில் ஆங்கிலத்தை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை Anti-Terrorism Act (ATA) அவசரமாக முன்வைக்கப் போவதில்லை என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஊவா மாகாண சபை கல்வி அமைச்சுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட கல்வித்துறை பட்டதாரிகள் 21 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த 25.04.2023 செவ்வாய்க்கிழமை ஊவா மாகாண பிரதான செயலாளர் காரியாலயத்தில் நடைபெற்றது.
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.