சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 08)

வேலை செய்யும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளல், சம்பளத்தை அதிகரித்துக்கொள்ளல், வாக்குரிமை மற்றும் சிறுவர் ஊழியத்திற்கு எதிராக பேரணி வகுத்துச் சென்றமை காரணமாக, ஆடைத் தொழிலில் உள்ள 15,000 பெண்கள் நியூயோர்க் நகரில் 1908 ஆம் ஆண்டு தொழிலாளர் இயக்கத்தின் மூலம் சர்வதேச மகளிர் தினம் உருவானது.

அதன்பிறகு, 1909ல், முதல் மகளிர் தினம் அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியால் பிரகடனப்படுத்தப்பட்டது. ஒரு வருடம் கழித்து, 1910 இல் கோபன்ஹேகனில் நடந்த வேலை செய்யும் பெண்களுக்கான சர்வதேச காங்கிரஸில், ஒரு கம்யூனிஸ்ட் ஆர்வலரும் பெண்களின் உரிமைகளுக்காக வாதிடும் கிளாரா ஜெட்கின், மகளிர் தினத்தை சர்வதேச தினமாக மாற்ற வேண்டும் என்று அறிவித்தார். மாநாட்டில் தீர்மானத்தை 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். சர்வதேச மகளிர் தினம் 1977 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. அதன் முதலாவது கொண்டாட்டத்தின் கருப்பொருள் ``கடந்த காலத்தைக் கொண்டாடுதல், எதிர்காலத்தைத் திட்டமிடுதல்'' என்பதாகும்.

2011ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதன்படி, 2024ம் ஆண்டு 113வது ஆண்டு மகளிர் தின விழா கொண்டாட்டமாகும்.

ஏனைய பல கொண்டாட்டங்களைப் போலல்லாமல், மகளிர் தினம் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஒரே பொதுவான நாளாகக் கொண்டாடப்படுகிறது. இனம், மொழி, கலாச்சாரம் போன்ற எந்தப் பிரிவினையும் இல்லை, மேலும் பெண்களுக்கான தடைகளையும் சவால்களையும் வெற்றிகொள்ள அனைத்து குழுக்களும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன.

1978ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முறையாக சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. அன்று தொடக்கம், இந்த அமைச்சு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கருப்பொருள்களில் தேசிய கொண்டாட்டம் மற்றும் தொடர் நிகழ்ச்சிகள் மூலம் பெண்களை வலுவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் 'பெண்களின் முதலீட்டின் மூலம் விரைவான முன்னேற்றம்', அதே நேரத்தில், 'அவளுடைய பலம் - நாட்டிற்கு முன்னேற்றம்' என்பது தேசிய கருப்பொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய கொண்டாட்டமானது 2024 மார்ச் 08 ஆம் திகதி வோட்டர்ஸ் எட்ஜ் வளாகத்தில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

பாரம்பரிய வகிபாகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவு, திறன் மற்றும் தொழில் தன்மையுடன் கூடிய இலங்கைப் பெண்கள் இன்று இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு தனித்துவமானப் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

இத்தகையப் பின்னணியில் குடும்பம் மட்டுமின்றி சமூகத்திலும் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கும் பெண்கள் நாட்டின் அபிமானத்திற்குரியவர்கள்.

நிலையான அவிவிருத்திக்கானப் பயணத்தில் பெண்களின் பங்களிப்பை மேலும் பலப்படுத்த அரசாங்கம் தற்போது விரிவான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதோடு, டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்திற்காக பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

மேலும், மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், புதிய சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கிப் பெண்களின் அபிமானம் மற்றும் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், பெண்கள் மீதான பாகுபாட்டைத் தவிர்க்க, முதல் முறையாக தேசிய ஆண் /பெண் பாலினக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளமை சிறப்பம்சமாகும்.

தேசிய மகளிர் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான இரண்டு புதிய சட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான ஐந்தாண்டு தேசிய செயல் திட்டம் தற்போது இறுதிச் செய்யப்பட்டு அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

அத்தோடு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கத் தேவையான சட்ட திருத்தங்களையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் வளமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒட்டுமொத்த பெண்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதோடு, சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image