அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வரி கொள்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிக்க போவதில்லை என விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
All Stories
எந்தவொரு குழுவினரும் பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கபோவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
முறைசாரா பெண் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றதா? என்று கேள்வி எழுப்பப்படுமானால் இல்லை என்ற பதிலே மேலோங்கி காணப்படுவதாக ப்ரொடெக்ட் சங்கத்தின் அட்டன் கிளைக்காரியால தலைவி கிரிசாந்தி தமிழ்செல்வம் தெரிவித்தார்.
உயர் தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகளில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்புபட்டால், துரித திட்டம் மூலம் விடைத்தாள் மதிபீட்டை மேற்கொள்ளத் தயார் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் அடுத்த வாரமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அச்சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
ஏப்ரல் 20 ஆம் திகதி முதல், சமய நிகழ்வுகள் தவிர்ந்த, இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக காலிமுகத்திடலைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர் சிலருக்கு கடந்த வருட பங்கு இலாபம் சிலருக்கு ஒரு லட்சம் வரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக களனிவெளி, தலவாக்கலை மற்றும் ஹொரனை ஆகிய பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொசான் ராஜதுரை தெரிவித்தார்.
பெண்களின் வாழ்விற்கான சம்பளம், சேமஇலாப விடயங்கள் மற்றும் தொழில் ரீதியாக கிடைக்க வேண்டிய கௌரவம் என்பவற்றை முறையாக நடைமுறைப்படுத்த கொள்கைகளையும் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என விடிவெள்ளி மகளிர் அமைப்பின் தலைவி பொன்னையா தெய்வானை கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்சார விநியோகம், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், தபால் சேவை மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி முதல் பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுப்பட்டு வந்த அரை சொகுசு பஸ் சேவையை அடுத்த மாதம் முதல் இரத்து செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் , அனைத்து அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச துறை நிறுவனங்கள் பலவற்றின் ஊழியர் குழாம் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களுக்குமான திறந்த போட்டிகள் மற்றும் வெளிநாட்டவர்ளுக்கான போட்டிகள் அடங்கிய “வசந்த சிரிய 2023” (வசந்தத்தின் வனப்பு 2023) தமிழ் சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டம் ஏப்ரல் 22 ஆம் திகதி சனிக் கிழமை கொழும்பு காலிமுகத்திடல் மைதானததில் நடைபெறும்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல், திகதி நிரணயமின்றி மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.