வௌிநாடுகளில் பணிபுரிந்து மீள நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இறுதியாக செய்யப்படும் பிசிஆர் பரிசோதனை எதிர்மறையாக இருப்பின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் இருப்பது அவசியமில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
All Stories
தினமும் 500 தொடக்கம் 600 புலம்பெயர் தொழிலாளர்கள் வரை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுத்து வருவதாக இராணுவத தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்று காரணமாக வௌிநாடுகளில் உள்ள 42 தூதரக சேவைகளுக்கு 10 கோடி ரூபா நிதி ஒதுக்க வௌிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சுகயீனம் காரணமாக குவைத் வைத்தியசாலையில் பல இலங்கைப் பெண்கள் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தொலைபேசியூடாக தெரிவித்தார் என்று லங்காதீப இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு, மாலைதீவு ஆகிய நாடுகளில் சிக்கித் தவித்த 655 இலங்கையர்கள் நேற்றுமுன்தினம் (08) அதிகாலை இலங்கையை வந்தடைந்தனர்.
ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து சென்ற சொகுசு பேருந்து இன்று (27) காலை 9.45 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இத்தாலியில் இருந்து 116 இலங்கையர்கள் இன்று (20) பகல் இலங்கை வந்தடைந்தனர்.
கொரிய மொழித் திறன் பரீட்சையில் கடந்த ஆண்டு (2019) தோற்றியவர்களை விடவும் இவ்வாண்டு (2020) 20 வீதமானவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கொவிட் 19 தொற்று காரணமாக நாட்டுக்கு திரும்ப முடியாது இருக்கும் தம்மை விரைவில் மீள அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர் சிலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
குவைத்தில் பணியாற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் வேலை அனுமதி (Work permit) மற்றும் தங்கியிருப்பதற்கான அனுமதி அட்டை (Iqama) என்பன புதுப்பிக்கப்படாது குவைத் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்புரியும் இலங்கையர்களில், சுமார் 3,000திற்கும் அதிகமானோர் கொவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் இதுவரை சுமார் 70திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிய நிலையில் நாடு திரும்ப முடியாதிருந்த 188 இலங்கையர்கள் பேர் இன்று (24) அதிகாலை நாடு திரும்பினர்.