லெபனான் ஊடாக இலங்கையர்களை படகு மூலம் இத்தாலிக்கு அழைத்துச் செல்லும் கடத்தல் நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
All Stories
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்றி, 22 கரட்டுக்கு அதிகமான தங்கப் ஆபரணங்களை அணிந்த பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தடை விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஓமானில் பெண்களை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர் ஈ.குஷான் என்பவரை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஓமானுக்கு மனித கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் இ.குஷானின் இராஜதந்திர கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4,000 இலங்கை தாதியர்கள் பணிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
ஓமானில் பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளான இலங்கை பெண்கள் தொடர்பிலான சம்பவங்களின் பின்னணியில் செயல்பட்டவர்களுடன் தொடர்புபட்ட வலைப்பின்னல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் முகாமையாளர் ஈ.டீ.பீ. சேனநாயக்க தெரிவித்தார்
தாதியர் துறைக்கு இலங்கையர்கள் இணைத்துக்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு சிங்கப்பூரில் இருந்து நிபுணர்கள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. இதனூடாக சுமார் 4000 தாதியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா விசா செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்ததன் பின்னரும் ஓமானில் தங்கியுள்ள இலங்கை பெண்களிடம் அறவிடப்படும் அபராதத் தொகையை நீக்குவதற்கான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதாக வௌிநாட்டு தொழில்வாய்ப்பு நலன்புரி அமைச்சு தெரிவித்துள்ளது.
அனுமதிப்பத்திரம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய உரிமையாளர்களுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (23) கலந்துரையாடியுள்ளார்.
மனித கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு தரகர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லும்பொழுது, என்.வி.கியூ.சான்றிதழ் மற்றும் 45 நாள் பயிற்சி கட்டாயமாக்கப்படவுள்ளது..