வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கமான 'ப்ரொடெக்ட்' சங்கத்தின் ஹட்டன் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் 12.11.2022 சனிக்கிழமை ஹட்டன் கொட்டகலையில் நடைபெற்றது.
All Stories
மக்கள் கோரும் முறைமை மாற்றத்திற்கு (சிஸ்டம் சேஞ்ச்) அரசியல்வாதிகள் ஒத்துழைத்தாலும் ஒரு சில அரச அதிகாரிகளுக்கு அதில் விருப்பம் இல்லாமையால் வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
அக்கரப்பத்தனையில் மின்சாரம் தாக்கி பலியான தோட்டத் தொழிலாளியான இராமகிருஸ்ணனின் குடும்பத்துக்கு நிர்வாகம் இழபபீடாக 50 இலட்சம் ரூபாவும் வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்ல காணி ஒன்றும் வழங்க இணங்கியுள்ளது.
கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, 2022 நவம்பர் 08ஆந் திகதி வியட்நாமில் உள்ள வோங் டோ துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பயணிகளின் முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது.
வீட்டுப் பணியாளர்களுக்கு சிறந்த வேலை நிலைமைகளை வென்றெடுப்பதற்கும் தொழிலாளர் சட்டங்களின் கீழ் பாதுகாப்பு பெறுவதற்கும் ப்ரொடெக்ட் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
அனைத்து அரச சேவைகளுக்கும் ஒன்றிணைந்த பொறிமுறையொன்றை அமைப்பதற்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஆசிரியர் ஒருவரின் பையில் இருந்த பணத்தை திருடியதாக குற்றம் சுமத்தி மாணவர்கள் சிலரை தாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹொரணை - மில்லனிய பகுதி பாடசாலையின் அதிபர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கும் வேலைத்திட்டம் நேற்று (11) அறிமுகப்படுத்தப்பட்டது.
ஓய்வூதியப் பணிக்கொடையை வழங்கும்போது கடந்த காலத்தில் காலதாமதமாகியிருந்ததை சரிசெய்வதற்கு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும், நலமாக உள்ளதாக நேற்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், வியட்நாம் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லே தி து ஹங் தகவலை வெளியிட்டுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டீ. தர்மசேன தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் ஆடை தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆசிரியர்களிடமும் கருத்து கணிப்பொன்றை நடத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான பொதுப் பரீட்சையொன்று நடத்தப்படவுள்ளது என்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.